உதகை மலை ரயில் சேவைக்கான "யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து விருது" 13-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்



நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாரம்பரிய மலை ரயில் கடந்த 1898-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இந்த ரயில்சேவை 1980-ல் உதகை வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த மலை ரயில் பாதையில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே ஆடர்லி, ஹில்குரோவ், ரன்னிமேடு ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. இயற்கை எழில்கொஞ்சும் மலைப்பாதை வழியாக இந்த ரயிலில் பயணிக்க பல்வேறு மாநிலத்தவரும் விரும்பி வந்துசெல்வர்.



நூற்றாண்டை கடந்த உதகை மலை ரயிலுக்கு 2005-ம் ஆண்டு ஜூலை 15ம் தேதியன்று யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய அந்தஸ்து விருதினை வழங்கி கவுரவித்தது.

இன்றுடன் பாரம்பரிய அந்தஸ்து பெற்று 12-ஆண்டுகள் நிறைவுபெற்று 13-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இத்தகைய பெருமை மிக்க மலை ரயிலை நீராவியால் இயக்க பயன்படுத்தப்பட்ட இன்ஜினை காட்சிப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காட்சிக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ரயில்வே அறக்கட்டளை சார்பில் 13ம் ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சி இன்று கொண்டாடப்பட்டது. இதில், தோடர் இன மக்கள், இரயில் பயணிகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள், சிட்டிசன்ஸ் பாரம் ஆப் குன்னூர் அமைப்பின் நிர்வாகிகள் பரமேஷ்வரன், ஜெபரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டார்.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...